நல்லென்றே யாமம் சொல்லவிந்து
அடங்கினரே மாக்கண் முனிவின்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சாதேன்
நீ
என்னை விட்டு
உன் உயிருக்குள்
பிரியும் போது
சவப்பெட்டி தயாரித்தாய்
உறக்கத்தை புதைத்தாய்
அகிலமே துஞ்சினாலும்
அர்த்த சாமத்திலும்
கண்கள் துஞ்சவில்லை
ஐந்து அறிவு உடையவர்களா
இவர்கள் யாருக்குமே
என் கலக்கம் புரியவில்லையே .....
nice
ReplyDelete